தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி:
"யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை,ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து"
பொருள்:
யாழ் இசையையும், குழல் இசையையும் ,தளமும் , குறைந்த சத்தத்தில் இசைக்க வேண்டிய மத்தளமும், கூத்திற்கு ஏற்ற வாய்ப்பாட்டும் தகுந்த அளவுகளில் கூத்தின் வகைக்கு ஏற்றவாறு இசைக்க தெரிந்தவன்.
சிலப்பதிகாரத்தில் வரும் தண்ணுமை எனும் வாத்தியம் குறித்த பாடல் இது, அசப்பில் இன்றைய மிருதங்கம் போல இருக்கும்.
இடம்: கரிக்கியூர்,நீலகிரி மாவட்டம்.
