Saturday, 24 April 2021

கரிக்கியூர் காட்டெருமைகள்

 கரிக்கியூர் காட்டெருமைகள்:


பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு ஆசியாவின் அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வந்த இந்த பைசன்கள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காட்டெருமைகள் (பாகுபலி படத்தில் ராணா அடக்கும் எருமை) அங்கிருந்து ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா என இடமாற்றம் அடைந்து, நம் இந்திய எல்லையில் உள்ள காடுகளுக்குள் நுழைந்து, ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டதாய் கருதப்படுகிறது. இப்போது நம்முடைய கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் எருமைகள் எல்லாம் அந்த காட்டு எருமைகளின் மேம்பட்ட பிரதிகள்தான் என்றுவிலங்கியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


முரட்டுத்தனமான பைசன்கள், பரிணாம வளர்ச்சியில் அதன் ‘ட்ரெயிட்’ கள் உடம்பினின்றும் விலகிக்கொள்ள, வீட்டில் வைத்து வளர்க்கும் அளவுக்கு, சற்றே வலிமை குறைந்த மனிதனின் கட்டளைகளுக்கு அடிபணியக் கூடிய எருமையினம் உருவாயிற்று. பழங்காலச் சான்றுகள் மொகஞ்சதாரோவின் புதை படிமங்களில் இந்த காட்டெருமைகளின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த அகழ்வாராய்ச்சியில்

கிடைத்த சான்றுகளின்படி, இவை கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு விலங்கினம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இதை உறுதிசெய்யும் வண்ணம் 4000 வருடம் முந்தையதாய் கருதப்படும் கரிக்கியூர் ஓவியங்களில் அதிக அளவில் இந்த காட்டெருமைகள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இன்றும் நீலகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏகப்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகிறது.












No comments:

Post a Comment

தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி

  தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி : "யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை,ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்க...