யானையை பிடித்தல்:
அடர்ந்த வனங்களில் சுதந்திரமாய் திரியும் யானைகளை பிடித்துவந்து அதனை தமக்கு இனக்கமாய் மாற்றி, பளுதூக்கும் பணிகளுக்கும், படைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். கரிக்கியூர் பகுதியில் ஏகப்பட்ட யானைகள் இன்றும் உண்டு.
யானைகளை பயம்பு, வாரி, கெட்பி,அபாதம், அவாபதம், வாரிபந்தம், வாசபந்தம், அனுசுபந்தம் என பலவழிமுறைகளில் யானையை பிடித்துள்ளனர்.
"மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்"
புறநானூற்றின் பாடல் ஒன்று பயம்பு முறையில் யானை பிடித்தலை கூறுகிறது. படத்தில் காணப்படும் ஓவியம் பயம்பு முறையில் யானைபிடித்தலை காட்சிப்படுத்துகிறது.
தமிழர் வாழ்வியலில் யானைகள் எனும் புத்தகத்தின் வாயிலாய் இத்தகைய யானையை பிடித்து பழக்கும் முறைகளை விரிவாய் அறியலாம். இப்புத்தகம் நண்பர் தென் கொங்கு சதா சிவம் அவர்களால் எழுதப்பட்டது.

No comments:
Post a Comment