Tuesday, 20 April 2021

சண்டையிடும் ஓர் வீரனின் சிற்பம்

 ஆனைமேல் துஞ்சினார்:


குறுநில சோழஅரசனாய் இருந்த முதலாம் ஆதித்தன், பல்லவஅரசன் அபராஜிதனை யானையின் மீதேறி, அவரை தாக்கி கொன்றதனால் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை பெற்றார். Karma is a boomerang என்பதைபோல இவரது பேரன் ராஜாதித்தன் இராஷ்டரகூட தளபதி இரண்டாம் பூதுகனால் கடுமையான யுத்தத்தில் கொல்லப்பட்டார், இருவரும் சமமான வீரர்கள் இறுதியில் யானையின் அம்பாரியையே களமாக்கி இராஜாதித்தன் மார்பில் வாளை பாய்ச்சினார், இப்போரின் விளைவால் ஆதித்தன் கடினப்பட்டு பிடித்த தொண்டைமண்டலம் நழுவி ராஷ்ட்ரகூடனான கன்னரதேவன் வசம் ஆனது. இச்சம்பம் கடந்து சுமார் ஒரு நூற்றாண்டு கழிந்து முதலாம் ராஜாதிராஜன் சாளுக்கியடைகளால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டு யையானைமேலேயே இறந்து உயிர்விட்டு, "யானைமேல் துஞ்சிய தேவர்" ஆனார். இதேபோன்றொரு சம்பவம் அவர்களுக்கு சுமார் 2000-3000 வருடம் முன்பு நீலகிரி வனப்பகுதியில் நடந்ததை, அம்மலையில் இருந்த ஓர் ஓவியன் காட்சிப்படுத்தியுள்ளான். 


நீலகிரியில் உள்ள கரிக்கியூர் பகுதி இயற்கையாகவே மிகப்பெரிய வாழ்விடப்பகுதியாய் அமைந்துள்ளது. இம்மலையை ஒட்டி மாயாறு எனும் காட்டாறு ஓடுகிறது. பவானிநீர்த்தேக்கம் உள்ளது. மரங்கள்,கிழங்குகள், மலைத்தேன்கள், வேட்டையாடி உண்ண ஏகப்பட்ட வனவிலங்குகள் என ஒரு குழுவினர் வளமையுடன் வாழ ஏற்றப்பகுதியாய் திகழ்கிறது. எனவே இவ்விடத்தை பிடிக்க நிச்சயமாய் சில இனக்குழுக்களிடையே தொடர் சண்டைகள் நிகழ்ந்ததை, இங்குள்ள ஓவியங்கள் காட்சிபடுத்துகிறது. அதில் ஒன்றுதான் யானைமீதமர்ந்து சண்டையிடும் ஓர் வீரனின் சிற்பம். 

யானைமீதமர்ந்தவன், கீழுள்ள வீரனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனையே இந்த ஓவியன் வரைந்துள்ளான். நடுகல்லிற்கு முந்தைய நிலையாக கூட இவ்வோவியத்தை கொள்ளலாம். பாறை ஓவியம் உள்ள சில இடங்கள் இன்றும் பழங்குடியினரால் வணங்கப்பட்டு வருவதே இதற்கு ஓர் சான்று.



No comments:

Post a Comment

தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி

  தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி : "யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை,ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்க...