விருந்தோம்பல்:
“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகநானூறு:54)
விருந்து எனும் சொல்லிற்கு புதுமை எனும் ஒருபொருளை தொல்காப்பியம் தருகிறது.
பண்டைய தமிழரின் பண்பாட்டில் தலையாய் இருந்த பண்பு விருந்தோம்பல் ஆகும். “பண்டமாற்று முறை வழக்கிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழலில்.இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கால்நடையாகவே மக்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று.
‘விருந்தோம்பல்’ என்பது தம் இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும்.
கீழே படத்திலுள்ள பாறைஓவியம் கூறும் செய்தியும் அதுவே. இந்தஓவியம் அமைந்துள்ள கரிக்கியூர் பகுதி, நீலகிரி மலைப்பகுதியின் உயர்ந்த இடத்தில் உள்ளது.எனவே அங்கேயே தங்கியுள்ள நிலைகுடியினர் பெரும்பாலும் வெளியே அலைவதற்கு வாய்ப்பில்லை, தேவையான அனைத்து பொருளுமே அங்கேயே கிடைத்துவிடும், அதையும் தாண்டி அவ்விடத்திற்கு ஏதோ ஒருவிஷயத்தை பொருட்டு வரும் பிறகுடியினரை வரவேற்று மகிழ்வதில் பெரும்உவகை அடைவர்.
அதனையே கீழ்க்கண்ட ஓவியம் உணர்த்துகிறது. தம் கைப்பிடித்து புதிதாய் வருபவரை மகிழ்வாய் வரவேற்று மகிழ்கிறான் இந்த ஆதிக்குடி.

No comments:
Post a Comment